காஞ்சிபுரம்: அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 113 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், சமூக ஆர்வலருமான முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் உள்பட பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்கினார். அண்ணா பிறந்தநாள் விழா, நேற்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு வாலாஜாபாத் ஒன்றிய முன்னாள் கவுன்சிலரும், சமூக ஆர்வலருமான ஆர்.வி.ரஞ்சித் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அண்ணாவின் 113வது பிறந்த நாளை குறிக்கும் வகையில், அவரது வீட்டின் அருகில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அண்ணாவின் கொள்கை, கோட்பாடுகளை எடுத்துக் கூறி, இலவச நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்பட கல்வி உபகரணங்களை வழங்கினார்.